பிப்ரவரி 16 முதல் தொடங்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் – BCCI அறிவிப்பு!
கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 16 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக BCCI யிடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
BCCI திட்டம்:
கொரோனாவின் 3 வது அலை பரவி வருவதால் இதனை கட்டுப்படுத்த மத்திய அரசும் ,மாநில அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தடுப்பு முறைகளையும் மேற்கொண்டு வருகின்றன. இதைதொடர்ந்து நோய்த்தொற்று பாதிப்பால் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டித் தொடர்கள் அனைத்திற்கும் இந்திய கிரிக்கெட் வாரியமான BCCI தடை விதித்தது. அதேபோல் கடந்த ஆண்டு டிசம்பரை ஒட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த உள்நாட்டு கிரிக்கெட் போட்டித் தொடர்கள் BCCI அறிவிப்பின் படி ஒத்திவைக்கப்பட்டது.
அரசு ஊழியர்களுக்கு 10% சம்பள உயர்வு – சூப்பர் அறிவிப்பு! முழு விபரம் இதோ!
மேலும் நடப்பு 2021-22 பருவத்திற்கான ரஞ்சி கோப்பை சி.கே. நாயுடு கோப்பை மற்றும் மகளிர் சீனியர் இருபது ஓவர் லீக் ஆகிய உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது இந்தியாவில் உள்நாட்டு போட்டிகள் பெரிதும் நடைபெறவில்லை. நடைபெற்று கொண்டிருக்கும் போட்டிகளிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது இன்று 2022 ஆண்டிற்கான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடருக்கான குரூப் எலைட் போட்டிகள் பிப்ரவரி 16 ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் மார்ச் 5 ஆம் தேதி முடிவடைகிறது. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை என்று BCCI தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் இப்போட்டிகள் கொல்கத்தா, அகமதாபாத், சென்னை ஆகிய 3 இடங்களில் நடைபெறவுள்ளது.
தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் – அடுத்தடுத்து வெளிவரும் மோசடிகள்! குவியும் புகார்கள்!
சமீபத்தில் ரஞ்சி கோப்பை குறித்து BCCI அதிகாரி அருண் துமால் அளித்த பேட்டியில் ரஞ்சி கோப்பையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் தொடங்கவுள்ளோம் என்றும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் நோய் பாதிப்புகள் குறைந்து வருவதால் பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு மேல் இத்தொடர் நடைபெறும் என்றும் தெரிவித்தார் . அதே போல் தற்போது இம்மாதம் பிப்ரவரி 16 ஆம் தேதி இத்தொடர் நடைபெற உள்ளது. இத்தொடருக்கான நாக் அவுட் போட்டிகள் அனைத்தும் ஜூன் மாதம் நடத்தப்படவுள்ளது. மேலும் அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டித் தொடர்கள் நடத்துவதற்கு கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.