தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து விரைவில் அறிவிப்பு – கல்வித்துறை அதிகாரிகள் தகவல்!!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில், அதனை மீண்டும் திறப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா பரவல் அச்சத்தால் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. தற்போது வரை 8 மாதங்களை கடந்து விட்ட போதிலும் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளிகளை மீண்டும் திறந்து கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனை ஏற்று பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு, பின்னர் மாணவர்களுக்கு கொரோனா பரவியதால் மீண்டும் மூடின.
மாநில காவல் துறையில் 5.31 லட்சம் காலிப்பணியிடங்கள் – மத்திய அமைச்சகம் தகவல்!!
ஆனால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் முதல்வரிடம் ஆலோசித்து தேர்வு அட்டவணை வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளார்.
போட்டித் தேர்வர்களுக்கு முக்கிய அறிவுரைகள் – TNPSC வெளியீடு!!
இதற்கிடையில் தமிழகத்தில் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மூலம் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் பொதுத்தேர்வு எழுத உள்ள 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பு மற்றும் பாடங்களை நடத்தும் முறை குறித்து ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை காரணமாக காட்டி மாணவர் சேர்க்கையை நிறுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்