போட்டித் தேர்வர்களுக்கு முக்கிய அறிவுரைகள் – TNPSC வெளியீடு!!

0
போட்டித் தேர்வர்களுக்கு முக்கிய அறிவுரைகள் - TNPSC வெளியீடு!!
போட்டித் தேர்வர்களுக்கு முக்கிய அறிவுரைகள் - TNPSC வெளியீடு!!
போட்டித் தேர்வர்களுக்கு முக்கிய அறிவுரைகள் – TNPSC வெளியீடு!!

அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை எழுத விரும்பும் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நடைமுறைகளை TNPSC வெளியிட்டு உள்ளது. கொரோனா பரவல் காரணமாகவும், முறைகேடுகளை தடுக்கும் நோக்கிலும் இத்தகைய வழிமுறைகள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே இனி வரும் போட்டித் தேர்வுகளில் அறிவுரைகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு தேர்வர்களுக்கு TNPSC சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

முக்கிய அறிவுரைகள்:

தேர்வர்கள் காலை 9.15 மணிக்குள் தேர்வுக் கூடத்திற்கு சென்றிருக்க வேண்டும். அதன் பின்னர் வரும் தேர்வர்கள் யாரும் தேர்வெழுத கூடத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதற்கு முன்னர் நடந்த போட்டித் தேர்வுகளில் தேர்வு தொடங்கும் வரை தேர்வர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு உள்ளது.

விடைத்தாளில் விடைகளை குறிக்கவும், விபரங்களை பூர்த்தி செய்யவும் கருப்பு நிற மை உடைய பந்து முனை பேனாவை பயன்படுத்த வேண்டும். பென்சில் அல்லது பிற நிற பேனாக்களை பயன்படுத்த அனுமதி இல்லை.

ஜனவரி 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

விடைத்தாளில் உரிய இரு இடங்களில் கையெழுத்திட்டு, இடது கை பெருவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். மேலும் இவ்வாறு மை பதிக்கும் பொழுது விடைத்தாளின் பிற இடங்களில் மை பட்டு சேதமடையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

வினாத்தாளில் உள்ள கேள்விகளில் ஏதேனும் ஒன்றுக்கு விடை தெரியவில்லை என்றால் (E) என்ற வட்டத்தினை கருமையாக்க வேண்டும்.

மாநில காவல் துறையில் 5.31 லட்சம் காலிப்பணியிடங்கள் – மத்திய அமைச்சகம் தகவல்!!

தேர்வு விடைத்தாளில் (A), (B), (C), (D) மற்றும் (E) என்று ஒவ்வொரு விடைக்கும் எத்தனை வட்டங்கள் கருமை ஆக்கப்பட்டு உள்ளன என்பதை எண்ணி அதன் மொத்த எண்ணிக்கையை அதெற்கென ஒதுக்கப்பட்ட உரிய இடங்களில் நிரப்பி கருமையாக்க வேண்டும். இதனை செய்ய தவறினால் தேர்வர் பெறும் மதிப்பெண்ணில் இருந்து 5 மதிப்பெண் குறைக்கப்படும். எனவே இதனை தவறாமல் கவனத்துடன் செய்து முடிக்க வேண்டும்.

இதற்காக தேர்வர்களுக்கு தேர்வு நேரம் முடிந்த பிறகு, அதாவது 1.00 மணி முதல் 1.15 மணி வரை 15 நிமிடங்கள் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட உள்ளது. இந்த நேரத்திற்குள் மேற்கூறிய பணியினை முடித்து விடைத்தாளை தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!