8 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாணவர்கள் உற்சாகம்!!

0
8 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு - மாணவர்கள் உற்சாகம்!!
8 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு - மாணவர்கள் உற்சாகம்!!
8 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாணவர்கள் உற்சாகம்!!

ஜனவரி 1 ஆம் தேதி முதல் அசாமில் ஆரம்ப பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. சுமார் 50 சதவீத மாணவர்கள் வகுப்புகளில் கலந்து கொண்டனர். எட்டு மாதங்களுக்குப் பிறகு, கடுமையான வழிகாட்டுதல்களுடன் அசாமின் ஆரம்ப பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் உற்சாகத்துடன் வருகை புரிந்தனர்.

பள்ளிகள் திறப்பு:

அசாமில் கல்வித்துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவலின் படி, 50 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் முகக்கவசம் அணிந்தவாறு பள்ளிக்கு வந்தனர். துப்புரவு பணியாளர்கள் மூலம் அனைத்து இடங்களும் சுத்தம் செய்யப்பட்டு, சமூக இடைவெளியுடன் வகுப்புகள் தொடங்கியது. மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை எனவும், அவ்வாறு வர வேண்டும் என விரும்பினால் பெற்றோரிடம் எழுத்துபூர்வமாக சம்மதம் பெற்று வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அஸ்ஸாமில் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளின் மாணவர்கள் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பள்ளிக்கு வர வேண்டும். முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்புகளின் மாணவர்கள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு- ஜனவரி 4 முதல் தொடக்கம்!!

மேலும் வகுப்புகள் காலை 9.45 மணி முதல் பிற்பகல் 1:45 மணி வரை நடைபெறும். மதியம் 12.15 மணி முதல் 12.45 வரை அரை மணி நேர மதிய உணவு இடைவேளை விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஐந்து வயதுக்குட்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதியில்லை.

அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் ஆறாம் வகுப்பு முதல் உயர்கல்வி மாணவர்களுக்கு செப்டம்பர் முதல் பகுதிநேர வகுப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், ஜனவரி 1 முதல் சாதாரண முறையில் வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது. வழக்கமான வகுப்புகள் மீண்டும் தொடங்கியிருந்தாலும், பள்ளிக்கு வர இயலாத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும். மேலும், இது அனைத்து தனியார் மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரசுப்பள்ளி கணினி அறிவியல் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

கற்பித்தல் மற்றும் கற்பித்தல் அல்லாத ஊழியர்கள் ஒவ்வொரு 30 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும். கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பாலிடெக்னிக் மற்றும் பிற தொழில்முறை நிறுவனங்கள் அந்தந்த துறை அதிகாரிகள் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி செயல்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!