அரசுப்பள்ளி கணினி அறிவியல் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் முதன்முறையாக கணினி அறிவியல் ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் நியமிக்கும் கலந்தாய்வு ஜனவரி 2 (இன்று) & 3 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் நியமனம்:
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள கணினி அறிவியல் ஆசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு 742 பேருக்கு முதன்முறையாக 2 நாட்கள் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இந்த பணியிடங்களுக்கான தேர்வுகளை ஆசிரியர் தேர்வு ஆணையம் சார்பாக நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 2 நாட்களாக நடைபெறும் தேர்வில் தேர்ச்சி அடைந்த 742 ஆசிரியர்களில், ஜனவரி 2-ஆம் தேதி அன்று 1-ம் எண் வரிசை படி 1 முதல் 400 பேருக்கும், ஜனவரி 3-ஆம் தேதி 2-ம் எண் வரிசை படி 401 முதல் 742 பேருக்கும் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி நியமனம் – கொலிஜியம் உத்தரவு!!
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் முதன்முறையாக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஜனவரி 2,3 நடத்தப்படுகிறது. தேர்ச்சி பெற்ற 742 ஆசிரியர்களும் இரண்டு கட்டங்களாக கலந்தாய்வு நடைபெறுகிறது.
நாடு முழுவதும் ஜனவரி 2ம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை – மத்திய அரசு அறிவிப்பு!!
742 ஆசிரியர்களில் ஜனவரி 2-ஆம் தேதி 1 முதல் 400 நபர்களுக்கும், ஜனவரி 2-ஆம் தேதி 401 முதல் 742 நபர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வில் கலந்து கொள்ளும் தேர்வர்கள் அனுமதிச் சீட்டு, அசல் கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ்கள் மற்றும் பிற சான்றிதழ்களைக் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” இவ்வாறு அவர் குறிப்பிட்டார். கலந்தாய்வில் கலந்துகொள்ளும் தேர்வர்கள் சான்றிதழ்களை சரிபார்க்கும்படி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |