தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு – 85% மாணவர்கள் வருகை!!

0
தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு - 85% மாணவர்கள் வருகை!!
தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு - 85% மாணவர்கள் வருகை!!
தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு – 85% மாணவர்கள் வருகை!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 10 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு இருந்த பள்ளிகள் நேற்று முதல் திறக்கப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு வருகை புரிந்தனர். தமிழகம் முழுவதும் 85% மாணவர்கள் நேற்று வருகை புரிந்ததாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மாணவர்கள் வருகை:

கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அரசு சார்பில் கல்வி தொலைக்காட்சி, தனியார் பள்ளிகள் மூலம் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறி இருந்த நிலையில் தேர்வெழுத உள்ள மாணவர்களுக்கு விரைந்து நேரடி வகுப்புகளை தொடங்குமாறு வலியுறுத்தப்பட்டது.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – இந்த மாதம் அமல்!!

இதனையடுத்து நடத்தப்பட்ட கருத்துகேட்பு கூட்டத்தில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க சம்மதம் தெரிவித்தனர். அதன்படி ஜனவரி 19ம் தேதி (நேற்று) முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகள் என 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் திறக்கப்பட்டது. கிட்டத்தட்ட 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு வருகை புரிந்தனர்.

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பள்ளி வளாகத்தில் உடல்வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு சானிடைசர் வழங்கி வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. முதல் 2 நாட்களுக்கு மாணவர்களுக்கு வகுப்புகள் மட்டுமின்றி, மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட திட்டமிடப்பட்டது. அதன்படி நேற்று கொரோனா தொடர்பான விழிப்புணர்வு தகவல்கள், உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

தமிழக சட்டக்கல்லூரிகள் நவீனமயமாக்கல் – அரசு பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு!!

10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளான நேற்று மாநிலம் முழுவதும் 85% மாணவர்கள் வருகை புரிந்ததாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மாணவர்கள் கட்டாயமாக பள்ளிகளுக்கு நேரில் வருகை புரிய தேவையில்லை என அரசு ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!