அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – இந்த மாதம் அமல்!!
மத்திய அரசு பணியாளர்களுக்கும், ஓய்வூதியதரர்களுக்கும் 2021ஆம் ஆண்டிற்கான அகவிலைப்படி இந்த மாதம் முதல் உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு கூட்டமைப்பு சார்பில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தற்போது உள்ள பணவீக்கம் 28 விழுக்காடு அதிகரித்துள்ளதால் மத்திய அரசு பணியாளர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் உயர்த்தி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக இந்த முடிவு கிடப்பில் போடப்பட்டது. அதன்படி 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை செலுத்த வேண்டாம் என அரசு அறிவிப்பு வெளியிட்டது.
தமிழக சட்டக்கல்லூரிகள் நவீனமயமாக்கல் – அரசு பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு!!
அதன்படி 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல், 2021-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி வரையிலான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் கூடுதல் தவணை ஆகியவை செலுத்தப்படவில்லை. மேலும் ஏற்கனவே மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பதாக உத்தரவு பிறப்பித்தது, ஆனால் சில காரணங்களால் கடந்த ஏப்ரல் மாதம் அதனை ஒத்தி வைத்தது.
மாணவர்களுக்கு வருடம் ரூ. 2 லட்சம் உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!
இவ்வாறு சூழ்நிலையில் தற்போது இந்த மாதம் முதல் மத்திய அரசு பணியாளர்கள் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 4% உயர்த்தவும், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணத்தை 21 விழுக்காடு உயர்த்தவும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்தால் 50 லட்சத்திற்கு மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள், 61 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
10th mutithu vidan