ஜூன். 17 வரை பள்ளிகளுக்கு விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

0
ஜூன். 17 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - மாநில அரசு அறிவிப்பு!
ஜூன். 17 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - மாநில அரசு அறிவிப்பு!
ஜூன். 17 வரை பள்ளிகளுக்கு விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

மாநிலத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விடுமுறை:

இந்தியா முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இத்தகைய சூழலில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அசாமில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அசாமில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று தகவல் வெளியிட்டுள்ளது.

அகவிலைப்படி 62% உயர்வு – உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு!

இதனையடுத்து அம்மாநிலத்தின் டிமா ஹாசாவ் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஜூன் 17ஆம் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலச்சரிவு உள்ளிட்ட அபாயங்கள் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு பேரிடர் மேலாண்மை குழு அறிவுறுத்தியுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!