அகவிலைப்படி 62% உயர்வு – உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
பல்கலைக்கழக ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 62% உயர்த்தி உயர்கல்வித்துறை தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
மத்தியப்பிரதேச மாநிலத்தில் பல்கலைக்கழக ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த கோரிக்கை நீண்ட நாட்களாக வைக்கப்பட்டு வந்தது. இது குறித்து உயர்கல்வித்துறை அரசிடம் ஆலோசனை செய்து வந்தது. இந்நிலையில், தற்போது பல்கலைக்கழக ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 62% உயர்த்தப்பட்டு உள்ளதாக உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை – தபால் அலுவலகத்தில் விநியோகம்!
இதனால், தற்போது அகவிலைப்படி உயர்வு 201% ஆக நிறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தம் 25 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் பலனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு அறிவிப்பினால் ஓய்வூதியதாரர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.