1 முதல் 9 & 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 30 வரை பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
மாநிலம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று குறைந்திருக்கும் சூழலில் 1 முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஏப்ரல் 30 வரை நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா நோய் தொற்று காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்ட கல்வி இழப்பை ஈடுகட்ட, 1 முதல் ஒன்பது மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை முழு நாள் செயல்படும் என்று மகாராஷ்டிரா மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது கோடை விடுமுறையை பாதிக்கும் முடிவு என்று அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்கள் எழுந்திருக்கிறது. பொதுவாக, இம்மாநிலத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 15ம் தேதிக்குள் முடிந்து, அதன் பிறகு கோடை விடுமுறை தொடங்கும்.
நாட்டில் 9 நாட்கள் முழு ஊரடங்கு அமல் – எவற்றுக்கெல்லாம் தடை! அதிர்ச்சியில் பொதுமக்கள்!
ஆனால் இந்த ஆண்டு இந்த விடுமுறை சற்று தாமதமாக துவங்க இருக்கிறது. இது குறித்து மகாராஷ்டிரா அரசின் இணைச் செயலர் ஐ எம் காசி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள் ஞாயிற்றுக்கிழமைகளில் தன்னார்வத்துடன் அரை நாள் வரைக்கும் பள்ளிகள் செயல்படுவதற்கு பதிலாக ஏப்ரல் 30 வரை சனிக்கிழமைகள் தோறும் முழு நாள் வரைக்கும் செயல்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் 1 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளை ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் நடத்தி, மே மாதத்திற்குள் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இப்போது புனே மாவட்ட முதல்வர்கள் சங்கத்தின் தலைவர் ஹரிஷ்சந்திர கெய்க்வாட் கூறுகையில், பிப்ரவரி இறுதிக்குள் அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்க வேண்டும். பள்ளிகள் ஏற்கனவே தேர்வுகளை நடத்துவதற்கான ஆயத்தங்களை முடித்துவிட்டு கால அட்டவணையை வெளியிட்டு விட்டதாகவும், அதற்கேற்ப பல பெற்றோர்கள் கோடை விடுமுறையை திட்டமிட்டுள்ளதாகவும் கூறி இருக்கிறார். வழக்கமான பாடத்திட்டத்தில், மகாராஷ்டிர மாநில வாரியத்தின் கீழ் உள்ள பள்ளிகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் முடிந்து, அதன்பின் விடுமுறைகள் தொடங்கும். இப்போது இந்த புதிய அறிவிப்பு மூலம், மாணவர்கள் ஏப்ரல் இறுதி வரை பள்ளிகளுக்கு வர வேண்டும் என்பதால் பல்வேறு குழப்பங்கள் எழுந்திருக்கிறது.