நாட்டில் 9 நாட்கள் முழு ஊரடங்கு அமல் – எவற்றுக்கெல்லாம் தடை! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

0
நாட்டில் 9 நாட்கள் முழு ஊரடங்கு அமல் - எவற்றுக்கெல்லாம் தடை! அதிர்ச்சியில் பொதுமக்கள்!
நாட்டில் 9 நாட்கள் முழு ஊரடங்கு அமல் - எவற்றுக்கெல்லாம் தடை! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

நாட்டில் 9 நாட்கள் முழு ஊரடங்கு அமல் – எவற்றுக்கெல்லாம் தடை! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் அண்டை நாடான சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் ஏற்கனவே நாட்டில் 10 நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு பெரிய நகரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது எவற்றுக்கெல்லாம் இங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று விரிவாக பார்ப்போம்.

முழு ஊரடங்கு

இந்தியாவில் கொரோனா வைரஸின் புதிய வகை கொரோனாவான, “ஓமைக்ரான்” தொற்றால் 3ம் அலை பரவ தொடங்கியது. மேலும் ஓமைக்ரான் தொற்று உலகின் பல்வேறு நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது தொற்று பரவல் குறைந்த நிலையில் ஓமைக்ரானின் புதிய உருமாற்றம் அடைந்த BA.2 வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அத்துடன் கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அத்துடன் இங்கு ஜீரோ கோவிட் பாலிசி என்ற கொள்கை பின்பற்றப்படுகிறது.

அதன்படி நாட்டில் ஏதேனும் ஒரு நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் சாங்சுன், ஜலின் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது நாட்டின் பெரிய நகரமான ஷாங்காயில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் இந்நகரில் ஏப்ரல் 5ம் தேதி வரை இரண்டு கட்டங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்பில் சேர காத்திருப்பவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – AICTE முக்கிய அறிவிப்பு!

தற்போது எவற்றுக்கெல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதை விரிவாக பார்ப்போம்.

1. முழு ஊரடங்கு என்பதால் பொது போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2. மேலும் நகரில் அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

3. பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளிவர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா பரிசோதனைக்காக மட்டும் வெளிவர அனுமதிக்கப்பட்டுள்ளது

4. செல்ல பிராணிகளுடன் நடைப்பயிற்சி மேற்கொள்ள தடை விதித்துள்ளது.

5. பொது மக்கள் கட்டடங்களின் லாபிகளிலும் நிற்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!