அதீத வெப்பத்தால் மீண்டும் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு – கல்வித்துறை அறிவிப்பு!
தற்போது நிலவி வரும் அதீத வெப்பம் பள்ளி குழந்தைகளை பாதிக்க கூடாது என்னும் நோக்கத்தில் விடுமுறை காலம் நீடிக்கப்பட்டு, பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் நடப்பு ஆண்டின் கோடை காலத்தில் வழக்கத்தை விடவும் அதிக அளவில் வெப்பம் உணரப்பட்டது. இது தொடர்பாக வானிலை ஆய்வாளர்களும் மக்களை முன்னதாக அறிவுறுத்தினார்கள். கோடை கால விடுமுறை முடிந்து வழக்கமாக ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால், நடப்பு ஆண்டில் வெப்ப அலை இன்னும் குறையாமல் இருப்பதால் பல மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
Join Our WhatsApp Group” for Latest Updates
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் முன்னதாக ஜூன் 15ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது மாநிலத்தில் அதீத வெப்பம் நிலவி வருவதால் பள்ளி கவுன்சில் அதிகாரிகள் ஆலோசித்து பள்ளிகளுக்கு விடுமுறை ஜூன் 26ம் தேதி வரை நீடிக்கப்பட்டு, ஜூன் 27ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.