தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் பதில்!

0
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் பதில்!
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் பதில்!
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் பதில்!

தமிழகத்தில் நடப்பு ஆண்டு கோடை வெப்பம் அதிகமாக உள்ளதால் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பில் தாமதம் இருக்குமா? என்று கல்வித்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் தற்போது வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸை தாண்டி பதிவாகி வருகிறது. கடந்த ஆண்டு விட நடப்பு ஆண்டு வெப்பநிலை எதிர்பாராத அளவு உயர்ந்து உள்ளது. இந்த வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் பல்வேறு உடல் நல கோளாறுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு விரைந்து பள்ளி ஆண்டு தேர்வுகளை நடத்தி முடித்து விடுமுறை அளிக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது.

வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை – தமிழக அரசு!

இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் கோடை வெப்பத்தின் காரணமாக பள்ளிகள் திறப்பு தாமதமாகுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இன்று சென்னை சைதாப்பேட்டையில் JEE, NEET உள்ளிட்ட தேர்வுக்கான பயிற்சி திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் இந்த பயிற்சி திட்டத்தில் எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பதாக கூறினார்.

மேலும் பள்ளிகள் திறப்பு குறித்து பேசிய அவர், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் போது உள்ள வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும். தற்போதைக்கு எந்த முடிவும் எடுக்க இயலாது என்று கூறினார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!