பயணிகளின் கவனத்திற்கு….கோடை விடுமுறை மற்றும் பண்டிகையை ஒட்டி விமான கட்டணம் பல மடங்கு உயர்வு!

0
பயணிகளின் கவனத்திற்கு....கோடை விடுமுறை மற்றும் பண்டிகையை ஒட்டி விமான கட்டணம் பல மடங்கு உயர்வு!
பயணிகளின் கவனத்திற்கு....கோடை விடுமுறை மற்றும் பண்டிகையை ஒட்டி விமான கட்டணம் பல மடங்கு உயர்வு!
பயணிகளின் கவனத்திற்கு….கோடை விடுமுறை மற்றும் பண்டிகையை ஒட்டி விமான கட்டணம் பல மடங்கு உயர்வு!

தமிழகத்தில் கோடை விடுமுறை மற்றும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு பயணித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் இருந்து மதுரை மற்றும் திருச்சிக்கு விமான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

கட்டண உயர்வு:

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் சர்வதேச விமான நிலையங்கள் இயங்கி வருகிறது. பயணம் செய்வது கட்டாயமானதாக உள்ளத்தால் பேருந்து, ரயில் மற்றும் விமானம் மூலம் பொதுமக்கள் தினந்தோறும் தங்கள் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. இதனால் பொது மக்கள் ஆங்காங்கே பயணம் செய்து தங்களது கோடை விடுமுறையை கழித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் பதில்!

தற்போது கோடை விடுமுறை மற்றும் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி விமான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மதுரை மற்றும் திருச்சிக்கு 13 ஆயிரம் ரூபாயாக கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கார்களில் செல்வதை காட்டிலும் விமானத்தில் செல்வதால் குறைந்த நேரத்தில் சென்று விட முடியும் என்பதால் பெரும்பாலும் விமானத்தில் செல்ல முன் வருகின்றனர். ஆனால் தற்போது விமான கட்டணம் பன் மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!