தீவிரமடையும் கனமழை – பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்த மாவட்ட நிர்வாகம்!!
தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (ஜூலை 6) விடுமுறை அளிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
பள்ளி விடுமுறை
தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் அதிகமான வெப்பம் மற்றும் மழை பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோடை காலத்தில் வாட்டி எடுத்த வெப்பம் தணிந்து இப்போது மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. அதாவது, தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அம்மாவட்டத்தில் வால்பாறை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
SSC Stenographer தேர்வர்களுக்கான முக்கிய அறிவிப்பு 2023 – தேர்வு தேதி வெளியீடு!
இந்த சூழலில் நீலகிரி மாவட்டத்தில் தற்போது பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய தாலுகாக்களில் உள்ள பள்ளிகள் நாளை (ஜூலை 6) செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தேனி, தென்காசி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.