வேலையில்லா இளைஞர்களுக்கு மானியத்துடன் கடன் உதவி – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசு வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் மானியத்துடன் கடன் உதவி வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் சேர விரும்புவர்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
கடன் உதவி:
தமிழக அரசு வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அண்மை காலமாக தனியார் துறைகள் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் நோக்கில் மாவட்டம் வாரியாக மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக ஏராளமான இளைஞர்கள் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
இந்தியாவில் விதவை பெண்களுக்கு ரூ. 1,500 ஓய்வூதியம் – முழு விவரம் இதோ!
அதன் தொடர்ச்சியாக வேலையில்லா இளைஞர்களுக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டத்தின் கீழ் மானியத்துடன் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் தொகை தற்போது ரூ. 15 லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான மானிய தொகை ரூ. 3.5 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அரசின் இந்த வேலைவாய்ப்பு உருவாக்க திட்டத்தின் கீழ் சேர்ந்து பயன் பெற விரும்புபவர்கள் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அலுவலகத்தில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Follow our Twitter Page for More Latest News Updates
TNPSC Online Classesscholarship scheme for jobless graduates