அரசு ஊழியர்கள் ஊதியத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கும் திட்டம் – அமைச்சரவை ஒப்புதல்!
ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பல் முக்கிய திட்டங்களுக்கான ஒப்புதல் கிடைத்துள்ளது.
அமைச்சரவை ஒப்புதல்:
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்துள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் பல முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது. அரசின் பல்வேறு துறைகளுக்கும் 6,840 புதிய பணியிடங்களுக்கு நியமனம் செய்யவும், மாவட்ட தலைமையகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை கொடுப்பனவை (HRA) 12%ல் இருந்து 16 % ஆக உயர்த்தவும், DA 2.73% அதிகரிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
வேலையில்லா இளைஞர்களுக்கு மானியத்துடன் கடன் உதவி – விண்ணப்பங்கள் வரவேற்பு!
மேலும், 2019ம் ஆண்டு மாநில சட்ட மன்ற தேர்தலில் முதல்வர் உறுதி அளித்தது போலவே GPS ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான ஆலோசனை நடத்தப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி, அரசு ஊழியர்கள் தாங்கள் இறுதியாக பெற்ற ஊதியத்தில் 50% தொகையை ஓய்வூதியமாக அளிப்பதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.