தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கல்வி உதவித்தொகை:
தமிழகத்தில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அத்தகைய திட்டங்களின் ஒன்று தான் கல்வி உதவித்தொகை திட்டம். அரசு மாணவர்களின் கல்வி நலனில் அக்கறை கொண்டு ஏழை எளிய பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்வி உதவித்தொகைகள் வழங்கி வருகிறது.
Exams Daily Mobile App Download
தற்போது நடப்பு கல்வியாண்டுக்கான (2022 – 2023) கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பபதிவுகள் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ் சேர்ந்து பயன் பெற விரும்புபவர்கள் scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை திட்ட இணையதளத்தில் அக்.31ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் விண்ணப்பிக்கும் மாணவர்கள் விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
EPFO திட்ட பயனர்கள் கவனத்திற்கு – ஓய்வூதியம் குறித்த விதிமுறைகள் இதோ!
Follow our Instagram for more Latest Updates
இந்த விண்ணப்ப பதிவில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அது மாணவர்களின் தொலைபேசி எண்ணிற்கு அனுப்பவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை மாணவர்கள் உடனடியாக சரி செய்ய வேண்டும். இல்லையெனில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.