SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வங்கி கணக்கு இனி செயல்படாது!
இந்தியாவில் உள்ள முன்னணி வங்கியான SBIல் கணக்கு வைத்திருப்பவர்கள் டிச. 31 ஆம் தேதி வரை பின்பற்ற வேண்டிய முக்கிய அறிவிப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வங்கி அறிவிப்பு:
இந்தியாவில் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது டிசம்பர் மாதத்திற்குள் வங்கி தொடர்பான சில பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். இது குறித்து ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. இது அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன் பின்பற்ற வேண்டியது கட்டாயம் ஆகும்.
தமிழகத்தில் நாளை( டிச.19 ) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – முழு பட்டியல் இதோ!!
எஸ்பிஐ வங்கியில் கணக்கு இருந்தால், கேஒய்சி சரிபார்ப்பு மற்றும் பேங்க் லாக்கர் ஒப்பந்தம் தொடர்பான பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். இதை செய்யாமல் இருந்தால் உங்களுக்கு சில சிக்கல் ஏற்படலாம். கேஒய்சி சரிபார்ப்புக்கான கடைசி தேதி ஏற்கனவே முடிந்துவிட்டது. ஆனால் நேரடியாக சென்று இந்த வேலையை செய்யலாம். அதே நேரம் பான் கார்டு, ஆதார் கார்டு மற்றும் புகைப்படத்துடன் சரிபார்ப்பை முடிக்கலாம்.வங்கிக்குச் சென்று அங்குள்ள KYC படிவத்தை பூர்த்தி செய்து இந்த ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். வங்கி வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் கேஒய்சி செயல்முறையை முடிக்க வேண்டியது அவசியம். அப்படி செய்யாமல் இருந்தால் வங்கி கணக்கு மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.