PF கணக்கில் பணம் உள்ளதா? எப்படி சரிபார்ப்பது? – முழு விவரம் இதோ!
இந்தியாவில் வருங்கால வைப்பு நிதி மூலம் உங்களுடைய சம்பளத்தில் இருந்து எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்படுகிறது என இந்த பதிவில் பார்க்கலாம்.
பிஎஃப் டெபாசிட்:
இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் ஒவ்வொரு மாதமும் தங்களுடைய சம்பளத்தில் ஒரு தொகையை பிஎஃப் செலுத்துகின்றனர். ஒவ்வொரு மாதமும் நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் உங்கள் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை கழித்து, PF பணத்தை டெபாசிட் செய்யும். செலுத்தப்பட்ட பணத்தை பொறுத்து வருடாந்திர வட்டி கிடைக்கும். இந்நிலையில் பணியாளரின் சம்பளத்தில் 12 % பிஎஃப் வரவு வைக்கப்படுகிறது.
நிறுவனத்தின் பங்களிப்பில் 3.67 சதவீதம் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். எனவே ஓய்வூதியத் திட்டத்தில் 8.33 சதவீதத் தொகை இருக்கிறது. ஆனால் சில நேரத்தில் பிஎஃப் கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்படுகிறது என்பதை நாம் சரிபார்க்காமல் விட்டுவிடுவோம். இதனால் உங்களுக்கு இழப்பு ஏற்படலாம். அது மட்டுமில்லாமல் சில நிறுவனங்கள் பிஎஃப் பங்களிப்பை செலுத்தவில்லை என புகார் வந்துள்ளது. அதனால் உங்களுடைய கணக்கில் பணம் இருக்கிறதா என்பதை எப்படி சரிபார்க்கலாம் என எளிய வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.
SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வங்கி கணக்கு இனி செயல்படாது!
- அதன் படி முதலில் EPFO போர்ட்டல் https://www.epfindia.gov.in/site_en/index.php என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் உங்களுடைய UAN நம்பரை ஆக்டிவேட் செய்திருக்க வேண்டும்.
- வெப்சைட் திறக்கப்பட்டதும் our services ஆப்சனுக்கு சென்று பணியாளர்களுக்கான கீழ்தோன்றும் மெனுவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- பின் சேவைகள் வரிசையின் கீழ் உறுப்பினர் பாஸ்புக்கைக் கிளிக் செய்ய வேண்டும்.
- உங்கள் UAN மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும்.
- பின் கேப்ட்சாவை உள்ளிட்டு உள்நுழைய வேண்டும்.
- உள்நுழைந்த பிறகு உறுப்பினர் ஐடியை உள்ளிட வேண்டும்.
- உங்கள் PF பேலன்ஸ் தொகை இப்போது காட்டப்படும்.
- அனைத்து வைப்புத்தொகைகள், ஐடி, உறுப்பினர் ஐடி, அலுவலகத்தின் பெயர், பணியாளர் பங்கு மற்றும் முதலாளி பங்கு உள்ளிட்ட அனைத்து விவரங்கள் இதில் காட்டப்படும்.