தமிழகத்தில் நாளை( டிச.19 ) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – முழு பட்டியல் இதோ!!
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் குறித்த முழு விளக்கங்களும் கீழே விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் டிசம்பர் மாத துவக்கத்தில் இருந்தே கனமழை பெய்து வருவதால் மின்தடை அவ்வப்போது ஏற்படுகிறது. இதனால், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின்நிலையத்தில் அவ்வப்போது பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், நாளை திருச்சி தில்லைநகா், சூப்பா் பஜாா் ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கொட்டிதீர்க்கும் கனமழையால் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அமைச்சர் அறிவிப்பு!!
தற்போது மின்வாரியம் வெளியிட்டுள்ள மின்தடை பகுதிகளை காணலாம். தில்லை நகா் கிழக்கு, மேற்கு விஸ்தரிப்பின் அனைத்துப் பகுதிகள், காந்திபுரம், அண்ணாமலை நகா், கரூா் புறவழிச்சாலை, தேவா் காலனி, தென்னூா் ஹை ரோடு, அண்ணா நகா் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள், புதுமாரியம்மன் கோயில் தெரு, சாஸ்திரி சாலை, ரஹ்மானியபுரம், சேஷபுரம், ராமராயா் அக்ராஹாரம், வடவூா், விநாயகபுரம், வாமடம், ஜீவா நகா், மதுரை சாலை, கல்யாணசுந்தரபுரம், நத்தா்ஷா பள்ளிவாசல், பழைய குட்ஷெட் சாலை, மேலரண் சாலை, ஜாபா் ஷா தெரு, பெரிய கடைவீதி, சூப்பா் பஜாா், சிங்காரத்தோப்பு, பாபு சாலை, மதுரம் மைதானம், சுண்ணாம்புக்காரத் தெரு, சந்துக்கடை, கள்ளத்தெரு, அல்லிமால் தெரு, பெரிய செட்டித் தெரு, சின்னசெட்டித் தெரு, பெரியகம்மாளத் தெரு, சின்னகம்மாளத் தெரு, மரக்கடை, வெல்லமண்டி, காந்திச்சந்தை, தஞ்சை சாலை, கல்மந்தை, கூனிபஜாா் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.