தமிழக ரேஷன் கடைகளில் சானிட்டரி நாப்கின்கள் விற்பனை – புதிய திட்டம் அறிமுகம்!
தமிழக ரேஷன் கடைகளில் சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும் திட்டம் இன்று முதல் துவங்கப்பட்டிருக்கும் நிலையில் குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் இந்த திட்டத்தின் மூலமாக பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது .
சானிட்டரி நாப்கின்
ரேஷன் கடைகளின் வாயிலாக பொது மக்களின் தேவைக்கு ஏற்ப பல்வேறு பொருட்கள் இலவசமாகவும் மற்றும் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில்தான் தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களின் விருப்பத்திற்கு ஏற்ப 20 கிலோ அரிசிக்கு பதிலாக 18 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ கேழ்வரகு பெற்றுக் கொள்ளலாம் என்கிற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல தற்போது பெண்களுக்காக ரேஷன் கடைகளின் வாயிலாக சானிட்டரி நாப்கின்கள் விற்பனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. தற்போதைக்கு கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த தோழி என்கிற சானிட்டரி நாப்கின்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு ஷாக் நியூஸ்.. மின்கட்டணம் மீண்டும் உயர்வு – மத்திய அரசு முடிவு!
அதாவது, 6 நாப்கின்கள் அடங்கிய ஒரு பாக்கெட்டின் விலை ₹30 என்கிற விலையில் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சாதாரணமாக வெளி சந்தைகளில் விற்பனை செய்யப்படும் நாப்கின்களை விட பல மடங்கு விலை குறைவு என்பதால் அதிக அளவில் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து பெண்களும் இந்த சானிட்டரி நாப்கின்களை வாங்கி பயன்படுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போதைக்கு கரூர் மாவட்டத்தில் மட்டும் இந்த திட்டம் துவங்கப்பட்டிருக்கும் நிலையில் கூடிய விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.