தமிழக அரசின் ஜாதிச் சான்றிதழ் வழங்க RTO – நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதிதிராவிடர் பழங்குடியின சான்றிதழ் வழங்குவதற்கு வருவாய் கோட்ட அதிகாரி அந்தஸ்துக்கு குறையாதவரை நியமிப்பது குறித்து அரசு பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு:
தமிழகத்தில் அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், பழங்குடியினர் ஆகியோருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. இதனால் பலர் முறைகேடுகள் செய்து அரசு வேலை பெறுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, அயர்னபள்ளி பஞ்சாயத்தைச் சேர்ந்த, நிர்குணா என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
சென்னை டூ பாரிஸ் நேரடி சர்வதேச விமான சேவை – இன்று முதல் தொடக்கம்!
அதில், பழங்குடியினருக்காக அயர்னபள்ளி பஞ்சாயத்து தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது. ஆனால் அதில் லட்சுமி நாகசங்கர் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார் இவர் ‘ஒக்கலிகர்’ என்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் முறைகேடாக சான்றிதழ் பெற்று பதவி ஏற்றுள்ளார். எனவே அவரது சான்றிதழை சரி பார்க்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
TN Job “FB Group” Join Now
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறுகையில், ஆதிதிராவிடர், பழங்குடியின சமூகத்தை சேராதவர்கள், போலி சான்றிதழ் பெற்று, அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிடுவதும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உரிமை கோருவது போன்ற முறைகேடுகள் நடைபெறுகிறது. அதிகாரிகளும், பல்வேறு காரணங்களுக்காக, அத்தகைய சான்றிதழ்களை வழங்குகின்றனர். இதனால் தகுதி உடையவர்களுக்கு பதவி கிடைக்காத நிலை ஏற்படுகிறது. எனவே ஜாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ், சொந்த இருப்பிட சான்றிதழ் வழங்குவதற்கு, ஆர்.டி.ஓ.,வை தகுதி பெற்ற அதிகாரியாக நியமிப்பதற்கான பரிந்துரையை அமல்படுத்துவது குறித்து, வருவாய் துறை பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.