சென்னை டூ பாரிஸ் நேரடி சர்வதேச விமான சேவை – இன்று முதல் தொடக்கம்!

0
சென்னை டூ பாரிஸ் நேரடி சர்வதேச விமான சேவை - இன்று முதல் தொடக்கம்!
சென்னை டூ பாரிஸ் நேரடி சர்வதேச விமான சேவை - இன்று முதல் தொடக்கம்!
சென்னை டூ பாரிஸ் நேரடி சர்வதேச விமான சேவை – இன்று முதல் தொடக்கம்!

தமிழகத்தில் சென்னையிலிருந்து பாரிஸ் செல்ல கூடிய சர்வதேச விமான சேவை இன்று தொடங்கியுள்ளது. வாரத்தில் ஒரு நாள் மட்டும் இந்த விமானம் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான சேவை:

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளும் தொற்றை கட்டுப்படுத்த முடியாமால் திணறி வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகள் விமான போக்குவரத்தை தடை செய்தது. விமான பயணிகள் மூலம் நோய் பரவும் அச்சம் நிலவுவதாக அரசுகள் தெரிவிக்கின்றன. ஊரடங்கு விதிக்கப்பட்டதன் காரணமாகவும் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. சரக்கு விமானங்களுக்கு மட்டும் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி விலக்கு அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறுமா? அரசுக்கு கேள்வி!

இந்த நிலையில் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அதை மக்களுக்கு செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. நாடுகள் அனைத்தும் தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்தும் தடுப்பூசிகள் செலுத்தும் பணியை துரிதப்படுத்தியும் வருகின்றன. இதன் விளைவாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது. மேலும் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு நாடுகளுக்கிடையேயான சர்வதேச விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த நிலையில் சென்னையிலிருந்து பாரிஸ் செல்ல கூடிய விமான சேவை தொடங்கியுள்ளது. இந்த ஏர் பிரான்ஸ் விமானம் சனிக்கிழமை காலை 10.45 மணிக்கு பாரிசிலிருந்து புறப்பட்டு இரவு 11.45 க்கு சென்னை விமான நிலையம் வருகிறது. மீண்டும் திங்கட்கிழமை 1.20 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு பாரிஸ் செல்லும் என விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!