ரூ. 6000 நிவாரணத்தொகை வழங்கும் பணி தீவிரம் – டிச.14 முதல் டோக்கன் விநியோகம்!
தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண தொகை வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர்.
நிவாரண தொகை:
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்ட மக்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ரேஷன் கடைகள் வாயிலாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 6000 நிவாரணத்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிவாரணத் தொகை வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கிராம நிர்வாக அதிகாரிகள் வருவாய் அலுவலர், தாசில்தார் ஆகியோர் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தற்போது மாவட்ட ஆட்சியர்கள் அரசுக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.
காவலர்களை பலப்படுத்த புதிய நடவடிக்கை – அரசின் அதிரடி உத்தரவு!
மேலும் நிவாரணத்தொகைக்கான டோக்கனை முன்கூட்டியே வழங்க முடிவு செய்யப்பட்டு அதன் படி 16ம் தேதிக்கு பதிலாக டிசம்பர் 14ஆம் தேதி முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும். நிவாரணத்தொகை வழங்க ஞாயிற்றுக்கிழமையும் ரேஷன் கடைகள் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.