வெள்ள நிவாரணமாக ரேஷன் கார்டுதாரருக்கு ரூ.6000 உதவித்தொகை – தமிழக அரசு அறிவிப்பு!!
வெள்ளத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.6000 உதவித்தொகை வழங்கவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
வெள்ள நிவாரணம்:
தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பொதுமக்கள் மத்தியில் மிக பெரிய இழப்பை ஏற்படுத்திவிட்டது. புயல் கரையை கடந்து 5 நாட்கள் ஆகியும் தற்போது வரையிலும் வெள்ள நீர் குடியிருப்புகளை சூழ்ந்து காணப்படுகிறது. மேலும், அனைவரின் வீட்டிற்குள்ளும் வெள்ள நீர் புகுந்து ஏகப்பட்ட உடமைகளை அடுத்து சென்றுவிட்டது. அது மட்டுமல்லாமல், கார், பைக்கள் அனைத்தும் நீரில் மூழ்கி தற்போது வரையிலும் மீட்கப்படாமல் இருந்து வருகிறது. இந்த வெள்ள நிவாரண பணிகளுக்காக ரூ.5060 கோடி நிதி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்த நிலையில் ரூ.450 கோடி மட்டுமே நிதியாக கிடைக்க பெற்றுள்ளது.
TNPSC குரூப் 1 தேர்வுக்கு பிளான் பண்ணி படிங்க.. ஈஸியா பாஸ் ஆகலாம்! வழிகள் இதோ!
மேலும், மத்திய அரசு நிதி வழங்குவதை பொறுத்து தமிழக மக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக இன்று முதல்வர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் மறுசீரமைப்பு, நிவாரணம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இதில், வெள்ளத்தால் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 30 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.6000 வழங்கவுள்ளதாக தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.