தமிழகத்தில் 4 மாவட்டங்களில் திங்கட்கிழமை கல்லூரிகள் திறப்பு – கல்வி இயக்ககம் அறிவிப்பு!!
மிக்ஜாம் புயலால் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்த 4 மாவட்டங்களில் திங்கட்கிழமை கல்லூரிகள் திறக்கப்பட இருக்கிறது.
கல்லூரி திறப்பு:
தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. மேலும், வெள்ள பாதிப்பு அதிகமாக இருந்ததனால் தற்போது வரையிலும் மரங்கள் சாய்ந்தும், கட்டத்திற்குள் நீர் புகுந்தும் காணப்படுகிறது. இதற்கான மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்து வருகிறது.
வெள்ள நிவாரணமாக ரேஷன் கார்டுதாரருக்கு ரூ.6000 உதவித்தொகை – தமிழக அரசு அறிவிப்பு!!
இதனிடையே, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் திங்கட்கிழமை முதல் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை தற்போது வரை எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை. நாளைக்குள் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.