ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரூ. 6000 நிவாரணம் – தமிழக அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரேஷன் கார்டு இல்லாத குடிமக்களுக்கும் ரூ. 6000 நிவாரணம் வழங்க பரிசீலனை செய்ய இருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
ரூ. 6000 நிவாரணம் :
தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ. 6 ஆயிரம் நிவாரணம் வழங்க இருப்பதாக தமிழக அரசு அறிவுத்திருக்கிறது. மேலும், நிவாரணத் தொகை பொதுமக்களை முழுமையாக சென்றடையும் வகையில் ரேஷன் கார்டுகள் மூலமாக ரொக்க பணமாக வழங்க திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும், பொதுமக்களுக்கு நிவாரணத்தொகை வழங்குவது தொடர்பாக அதிகாரிகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் டிச.27ம் தேதி உள்ளூர் விடுமுறை – கலெக்டர் உத்தரவு!
இது போக, நிவாரணத் தொகை வழங்குவதில் எந்த வித குளறுபடிகளும் ஏற்படக்கூடாது என்பதற்காக கைரேகை மூலமாக மட்டுமே நிவாரணம் வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில், வெள்ளத்தில் பலரின் ரேஷன் கார்டுகள் கல்வி சான்றிதழ்கள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டு விட்டதால் ரேஷன் கார்டு ” இல்லாதவர்களுக்கும் ரூ. 6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படுமா என பொதுமக்களின் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், பொது மக்களின் நலன் கருதி ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் ரூ. 6000 நிவாரணம் வழங்க பரிசீலனை செய்ய இருப்பதாக தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.