தமிழகத்தில் டிச.27ம் தேதி உள்ளூர் விடுமுறை – கலெக்டர் உத்தரவு!
தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தையம்மன் திருவிழா டிசம்பர் 27 ம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ளதால் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
நீலகிரியில் உள்ள ஹெத்தையம்மன் படுகர் இன மக்களின் குலதெய்வமாக கருதப்படுகிறது. இதனால் அங்குள்ள சின்ன பிக்கட்டி, பெரிய பிக்கட்டி,ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, பேரட்டி, மல்லிக்கொரை, மஞ்சுதளா ஆகிய 8 கிராமங்களில் உள்ளவர்கள் இப்பண்டிகை அன்று விரதம் இருந்து பாத யாத்திரை செல்வது வழக்கம். நடப்பாண்டில் டிசம்பர் 27ம் தேதி ஹெத்தை அம்மன் கோயில் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
கோத்தகிரி அருகே பேரகண்ணியில் இப்பண்டிகை கொண்டாடப்படும். இதனால் நீலகிரி மாவட்டத்திற்கு டிசம்பர் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். இதனால், அங்குள்ள பள்ளி,கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. இதனை ஈடு செய்யும் வகையில் 2024 ஜனவரி 6ம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.