கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் – முதல்வர் விரைவில் தொடக்கம்!
சமையல் எரிவாயு சிலிண்டருக்கு அரசு வழங்கும் மானியம் குறித்து முதல்வர் மக்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மானியம்:
மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை ஒட்டி குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டும் மானியம் வழங்கி வருகிறது. இதனால் மாநில அரசுகள் தனிப்பட்ட முறையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிலிண்டருக்கான மானியம் அளித்து வருகிறது. இந்நிலையில், புதுவையில் முதல்வர் ரங்கசாமி அவர்கள் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
அப்போது, புதுவையில் மகளிருக்கான உரிமைத்தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்தின் மூலம் 70,000 குடும்பத்தலைவிகள் பயன்பெறுவதாகவும், பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 வைப்பு நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இதேபோல், கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.