ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
சென்னையில் நேற்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 352 ரூபாய் அதிகரித்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்திருப்பதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை
நாட்டில் பங்கு சந்தையில் ஏற்படும் ஏற்ற, சரிவின் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வதும் குறைவதுமாய் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் நேற்று திடீரென தங்கத்தின் விலை அதிகரித்தது. மேலும், வார இறுதி நாளில் பொதுவாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 44 ரூபாய் அதிகரித்து ரூ.6070க்கும், சவரனுக்கு 352 ரூபாய் அதிகரித்து 48,560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
தமிழக அஞ்சல் துறையில் மாதம் ரூ.29,380/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
மேலும், நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்து இருக்கிறது. அதாவது, 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 6060 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 48 ஆயிரத்து 480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், சென்னையில் நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.79.70 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 10 காசுகள் அதிகரித்து 79.80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.