நாளை முதல் அரசு பேருந்துகளில் இலவச பயணம் – ஊர்மக்களின் நிலை என்ன?
மாநிலத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் நாளை முதல் அமலுக்கு வர இருக்கும் நிலையில் அரசு பேருந்து சேவையே இல்லாமல் சில கிராமங்கள் இருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலவச பேருந்து திட்டம்:
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதியின் படி நாளை முதல் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் தொடங்கப்பட இருக்கிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் 3 ஆயிரம் கிராமங்களுக்கு அரசு பேருந்து சேவையே இல்லாமல் இருக்கும் அதிர்ச்சி கலந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனால், இந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பெண்களுக்கு இந்த சலுகை கிடைக்கப் போவதில்லை என தெரிய வந்திருக்கிறது.
கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் – முதல்வர் விரைவில் தொடக்கம்!
பொதுவாகவே இந்த கிராமங்களில் இருக்கும் பெண்கள் ஆட்டோக்கள், ஜீப் மற்றும் தனியார் பேருந்து உள்ளிட்ட தனியார் வாகனங்களின் மூலமாகத்தான் தினமும் பயணம் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், அரசு பேருந்துகள் இயக்கப்படாத கிராமங்களுக்கும் பேருந்து வசதி செய்து தர வேண்டும் என போக்குவரத்து கழகத்திற்கு பெண்களின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.