தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 – அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை!
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களும் தற்போது அதிகம் எதிர்பார்த்து வரும் ஒரு முக்கிய திட்டம் மகளிர் உரிமைத்தொகை திட்டமாகும். இதற்காக அரசு மேற்கொள்ள உள்ள நடவடிக்கை குறித்து காணலாம்.
உரிமைத்தொகை:
தமிழக அரசு மாதம் தோறும் பெண்களுக்கு ரூ.1000 உரிமைத்தொகை அளிக்கப்பட உள்ளதாக திட்டத்தை செயல்படுத்துவது குறித்து வாக்குறுதிகள் அளித்த நிலையில், அதிகாரபூர்வ வெளியாகும் வரை பலமுறை இது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அதன்படி, நடந்து முடிந்த பட்ஜெட் தாக்கலில் தான் செப்டெம்பர் 15ம் தேதி அன்று திட்டம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.
ஒரே நாளில் அதிரடியாக 2,109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – மத்திய சுகாதாரத்துறை அறிக்கை!
அரசின் அறிவிப்பின் படி மொத்தம் ரூ.7,000 கோடி நடப்பு நிதியாண்டில் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தகுதியான பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 4 மாத காலம் இதற்காக உள்ள நிலையில், அரசு பெண்களின் வேலை, பொருளாதார நிலை, குடும்ப நிலை பற்றிய கணக்கெடுப்பை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.