ஒரே நாளில் அதிரடியாக 2,109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – மத்திய சுகாதாரத்துறை அறிக்கை!
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், திடீரென்று நேற்று மீண்டும் அதிகரித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று:
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஆனது தினம் தோறும் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறித்த அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அதன்மூலம் மக்கள் பாதிப்பு நிலவரங்களை அறிந்து கொள்ள முடிகிறது. இந்நிலையில், இந்த முறை அதிகபட்சமாக ஒருநாள் பாதிப்பு 11,000 ஐ தாண்டிய நிலையில் படிப்படியாக குறைந்து நேற்று முன்தினம் 1,331 பேர் மட்டுமே தொற்று பாதிக்கப்பட்டிருந்தனர்.
ட்விட்டரில் வந்த புதிய அப்டேட் – இனி ஆடியோ & வீடியோ காலில் பேசலாம்.. குஷியில் பயனர்கள்!
ஆனால் நேற்று ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து 2,109 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை உலகம் முழுவதும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,49,72,800ல் இருந்து 4,49,74,909 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக பதிவாகியுள்ளது. அதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,31,707ல் இருந்து 5,31,722ஆக உயர்ந்துள்ளது.