ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்தால் கட்டாயம் 3 ஆண்டு சிறை – எச்சரிக்கும் கலெக்டர்!

0
ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்தால் கட்டாயம் 3 ஆண்டு சிறை - எச்சரிக்கும் கலெக்டர்!
ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்தால் கட்டாயம் 3 ஆண்டு சிறை - எச்சரிக்கும் கலெக்டர்!
ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்தால் கட்டாயம் 3 ஆண்டு சிறை – எச்சரிக்கும் கலெக்டர்!

பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கும் நபர்கள் மீது அரசின் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்,

10 ரூபாய் நாணயம்:

இந்திய ரிசர்வ் வங்கி நாட்டில் புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை வெளியிடுகிறது. அரசால் வெளியிடப்படும் அனைத்து நாணயங்களும் அரசு அறிவிப்பு உள்ளவரை செல்லுபடி ஆகும். ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட 10 ரூபாய் நாணயம் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது முதல் அதை சுற்றி புரளிகளும் வளர்ந்து வருகிறது. அதாவது 10 ரூபாய் நாணயம் செல்லாது என்றும் இந்திய அரசு அதை தடை செய்துவிட்டது என்றும் வதந்திகள் பரவி வருகிறது. இதன் காரணமாக பொது இடங்களில் மக்கள் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு – அரசாணை வெளியீடு!!

இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி பலமுறை உரிய விளக்கமளித்தும் மீண்டும் இது போன்ற வதந்திகள் பரவுவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கும் கடைகள் மீது புகார் அளிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசால் வெளியிடப்பட்ட நாணயத்தை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!