ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் – ரூ. 1,500 கோடி வரை முதலீடு.. வெளியான அசத்தல் தகவல்!

0
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் - ரூ. 1,500 கோடி வரை முதலீடு.. வெளியான அசத்தல் தகவல்!
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் - ரூ. 1,500 கோடி வரை முதலீடு.. வெளியான அசத்தல் தகவல்!
ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் – ரூ. 1,500 கோடி வரை முதலீடு.. வெளியான அசத்தல் தகவல்!

சென்னையை தலைமையிடமாக கொண்டும் இயங்கி வரும் பிரபல நிறுவனமான ராயல் என்ஃபீல்டு தமிழகத்தில் புதிய தொழிற்சாலை ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதன் வாயிலாக வருங்காலத்தில் மின் மின்சார வாகனத்தின் உற்பத்தி அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

புதிய திட்டம்:

தமிழகத்தில் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இளைஞர்களை கவரும் வகையில் பல வகையான மாடல் பைக்குகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த 2022 – 2023 ம் நிதியாண்டில் மட்டும் சுமார் 834,895 பைக்குகளை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தில் பள்ளி நேர மாற்றத்திற்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுமதி – அரசு புதிய உத்தரவு!

இதனையடுத்து இதன் விற்பனையானது 39% அதிகரித்துள்ளது. அத்துடன் ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பு ஆண்டில் 350 சிசி, 450 சிசி மற்றும் 650 சிசி வகை மாடல் பைக்குகளை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்நிறுவனம் செய்யாற்றில் புதிய தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அதாவது காஞ்சிபுரம் அருகே செய்யாறில் நிறுவனம் ராயல் என்ஃபீல்டு 60 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளது. இதன் மூலம் வரும் காலத்தில் மின்சார வாகன உற்பத்தி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதற்காக அந்நிறுவனம் அடுத்த 24 மாதங்களில் சுமார் 1000 முதல் 1,500 கோடி முதலீடு செய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!