மாநிலத்தில் பள்ளி நேர மாற்றத்திற்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுமதி – அரசு புதிய உத்தரவு!
மாநிலத்தில் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக பள்ளிகளுக்கான நேரத்தை மாவட்ட ஆட்சியர்கள் மாற்றி கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.
வெப்ப அலை
இந்தியாவில் தற்போது கோடை காலம் தொடங்கிய நிலையில் பல மாநிலங்களில் வெயிலின் தாக்கம் வெளுத்து வாங்குகிறது. மேலும் இந்தியாவில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை தாக்கம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இயல்பான வெப்பநிலையை விட அதிகபட்சமாக 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் அபாயம் – வறண்ட வானிலை எதிரொலி!
இதில் குறிப்பாக ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 16 வரை வெப்பநிலை உயரும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதே போன்று, நாளைக்குள் (ஏப்ரல்.12) பெரும்பாலான இடங்களில் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என எச்சரித்துள்ளது. மேலும் அடுத்த 3 நாட்களுக்கு இந்த வெப்பநிலை கூடுதலாக 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்றும் கூறியுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதனால் மாநிலத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை என பள்ளி நேரத்தை மாற்ற மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுமதி அளித்து அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதே போன்று காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரை ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் மாணவர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download