தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் அபாயம் – வறண்ட வானிலை எதிரொலி!
மாநிலத்தில் வெப்பநிலை அடுத்த 4 நாட்களுக்கு இயல்பை விட அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வானிலை அறிக்கை:
மே மாத தொடக்கத்தில் அக்னி நட்சத்திரம் வெயில் தொடங்கி விட்டால், வெப்பநிலை தமிழகம் முழுவதும் 100 டிகிரியை தாண்டி செல்லும். அதன் பிறகு, ஜூன் மாதத்தில் தான் வெப்பநிலை படிப்படியாக குறைய தொடங்கும். இந்நிலையில், ஏப்ரல் மாதத்தின் முதல் வாரம் முதலே அதிக வெப்பம் நடப்பு ஆண்டில் நிலவி வருகிறது.
தமிழகத்தில் ஏப்ரல் 13 ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – இளைஞர்கள் கவனத்திற்கு!
தற்போது கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மட்டும் தமிழகத்தின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வைப்பிரிருப்பதாகவும், நாளை முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்பதால், வெப்பநிலை அதிகரிக்கும் என்றும், இதனால் தமிழக மக்கள் வெயிலில் இருந்து தங்களை காத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Exams Daily Mobile App Download