சன் டிவி ‘ரோஜா’ சீரியலில் அடுத்தடுத்து வரும் ட்விஸ்ட் – வெளியான ப்ரோமோ!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “ரோஜா” சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
“ரோஜா” சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “ரோஜா” சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது. தற்போது இந்த கதையில் பல விறுவிறுப்பான கட்டங்கள் ஒளிபரப்பட்டு வருகின்றது. அனுவை மாடியில் இருந்து தள்ளி விட்டதாக ரோஜா மீது பழி சுமத்தப்படுகிறது. இதனால் ரோஜா சிறையில் இருக்கிறார். ரோஜா வெளியே வர கூடாது என்பதற்காக “டைகர்” மாணிக்கம் அவருக்கு எதிராக வழக்காடி வருகிறார். ரோஜாவை சிறையில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என்று அவரது கணவர் அர்ஜுன் ஒரு பக்கம் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். அதற்கான ஆதாரங்களையும் சேகரித்து வருகிறார்.
விஜய் டிவி “குக் வித் கோமாளி கொண்டாட்டம்” நிகழ்ச்சி – வெளியான ப்ரோமோ!
இது ஒரு பக்கம் நடைபெற்று வர, மாடியில் இருந்து கீழே விழுந்த அனு கோமா நிலைக்கு சென்று விடுகிறார். இதனால் அர்ஜுன் மற்றும் இன்ஸ்பெக்டர் இருவரும் அதிர்ந்து போய் விடுகின்றனர். சாக்ஷி ரோஜா மற்றும் அனுவை கொலை செய்ய வேண்டும் என்று தீவிரமாக இருப்பதால் அர்ஜுன், அனுவை யாருக்கும் தெரியாமல் ஒரு இடத்தில் மறைத்து வைக்கிறார். இதனை தெரிந்து கொள்ளும் சாக்ஷி ஆட்களை வைத்து அனுவை கொலை செய்ய அனுப்புகிறார். ஆனால், அர்ஜுன் அவர்களை அடித்து விடுகிறார். இந்நிலையில், நேற்று தான் அனுவை மாடியில் இருந்து தள்ளி விட்டதாக ரோஜா ஒத்துக் கொள்கிறார்.
TN Job “FB Group” Join Now
தற்போது, ஒரு லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், “டைகர்” மாணிக்கம் மற்றும் பூஜா இருவரும் பேசிக்கொள்ளும் வீடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாக அர்ஜுன் கூறுகிறார். இதனை கேட்டு ரோஜா மகிழ்ச்சி அடைந்து விடுகிறார். தனக்கு பொய்யான அன்பு தேவையில்லை என்றும் கூறுகிறார். பின்னர், பாட்டி மற்றும் “டைகர்” மாணிக்கம் இருவருக்கும் அனு கடைசியாக அணிந்திருந்த உடையின் துப்பட்டா கிடைக்கிறது. அதில் இரத்த கரை இருப்பதை பார்த்து இருவரும் பதட்டம் அடைந்து விடுகின்றனர். இத்துடன் ப்ரோமோ முடிந்து விடுகிறது.