ஆகஸ்ட் 5ம் தேதி சென்னையில் மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் ஏற்படும் மின்தடை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் அதனை பராமரிப்பதற்கான வேலைப்பாடுகள் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடக்கும் இடங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விபரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் அதிகப்படியான மின்தடை ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தற்போது ஆங்காங்கே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் நாளை (ஆகஸ்ட் 5) மின்தடை ஏற்படும் பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய புதிய சட்டம் – அமைச்சர் தகவல்!
தாம்பரம் பகுதி: எல்.ஐ.சி காலணி ஒரு பகுதி, டி.ஆர் மணி தெரு, அண்ணா சாலை பகுதி, எம்.ஜி.ஆர் சாலை, ஐ ஐ டி காலனி, காமகோடி நகர்,விஜிபி சாந்தி நகர், சர்ச் அவன்யு, நெமிலிச்சேரி பிரதான சாலை, பாலா சுப்பிரமணியன் தெரு, முத்துச்சாமி நகர்,பாத்திமா நகர்,200அடி சாலை, பெரிய கோவிலம்பாக்கம்,மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி.
சொத்துப்பெரும்பேடு பகுதி: அட்டப்பாளையம், பாளையம்,சூரப்பேடு,ஓரக்கடு
TN Job “FB Group” Join Now
கிண்டி பகுதி: டிஜி நகர்,புழுதிவாக்கம் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
செங்குன்றம் பகுதி: அழிஞ்சிவாக்கம், செல்வ விநாயகா நகர், விளங்காட்டுப்பக்கம், தீயம்பாக்கம், கொசப்பூர்,கோமதி அம்மன் நகர்.