சினிமா to சின்னத்திரை.. ரோஜா சீரியல் Director இயக்கத்தில் நடிக்கவுள்ள பிரபல நடிகர் – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
ரோஜா சீரியலின் முன்னாள் இயக்குனர் சதாசிவம் ஜீ தமிழில் புதிய தொடர் ஒன்றை இயக்க உள்ளார்.அது பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.
புது தொடர்:
ஜீ தமிழில் ஹிட் தொடராக டெலிகாஸ்ட் செய்யப்பட்ட தொடர் செம்பருத்தி. இதில் ஹீரோவாக நடித்தவர் கார்த்திக் ராஜ். சீரியல் குழுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சீரியலில் நடிப்பதில் இருந்து விலகினார். பின்னர் வெள்ளித்திரையில் கவனம் செலுத்தினார் கார்த்திக்.
Follow our Instagram for more Latest Updates
மேலும் இவர் நடிப்பில் பிளாக் அண்ட் வைட் என்ற படமும் உருவாகியுள்ளது. மேலும் அந்த படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. அப்படத்தை ஜீ 5 ott தளம் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இவர் மீண்டும் சின்னத்திரைக்குள் என்ட்ரி கொடுத்துள்ளார்.
10 லட்ச பணத்தை மூர்த்தியிடம் ஒப்படைத்த கதிர்.. கெத்தாக மீண்டும் வீட்டிற்குள் நுழைந்த முல்லை!
Exams Daily Mobile App Download
அதாவது ஜீ தமிழில் தொடங்க இருக்கும் புது சீரியலில் கார்த்திக் நடிக்க உள்ளார். இந்த நெடுந்தொடரை ரோஜா சீரியலின் முன்னாள் இயக்குனர் சதாசிவம் இயக்க உள்ளாராம். அவரின் இயக்கத்தில் பல ஹிட் சீரியல்கள் டெலிகாஸ்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த சீரியல் மீதும் ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.