அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு – அரசாணை வெளியீடு!
ஆந்திர மாநிலத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த ஜனவரி 31ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள ஊழியர்கள் மத்தியில் குழப்பம் நிலவு வருகிறது. இந்த குழப்பத்தை தீர்க்கும் வகையில் முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
ஓய்வு பெறும் வயது உயர்வு
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு தொழில்களில் இழப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அத்துடன் ஊதியர்களின் நிலுவை தொகை வழங்காமல் இருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்கள் தங்களின் ஊழியர்களுக்கு அகவிலைப்படியில் உயர்வு வழங்கி வருகின்றனர்.
பிப்.4 முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு – அரசு அறிவிப்பு! மாணவர்கள் உற்சாகம்!
அதன்படி ஆந்திர மாநிலத்தில் 11வது ஊதிய திருத்தக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60யிலிருந்து 62 ஆக உயர்த்த வேண்டும் என்று அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இந்த அறிவிப்புக்கான அரசாணையை அரசு வெளியிடாமல் இருந்தது. அதனால் கடந்த ஜனவரி 31 ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள ஊழியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் இதற்கு ஆளுநரிடம் ஒப்புதல் பெற அனுப்பி வைக்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் பிப்ரவரி 15 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – முதல்வர் அறிவிப்பு!
இதனை தொடர்ந்து ஆளுநரிடம் ஒப்புதல் பெறப்பட்டு அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்த்தப்பட்டுள்ள அரசாணையை அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி இதனை 2022ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் 60 வயது நிரம்பி ஓய்வு பெறவுள்ள ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இத்திட்டமானது மூத்த ஊழியர்களின் அனுபவம் மற்றும் நிபுணத்துவத்தை பயன்படுத்தி கொள்ளுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது