மாநிலம் முழுவதும் பிப்ரவரி 15 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – முதல்வர் அறிவிப்பு!
அசாம் மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்த காரணத்தால் முன்னதாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டது. ஆனால் தற்போது வைரஸ் பரவல் விகிதம் குறைந்து வருவதால் வரும் பிப்ரவரி 15ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
முதல்வர் அறிவிப்பு:
அசாம் மாநிலத்தில் திங்கட்கிழமையான நேற்றைய நிலவரப்படி 1,811 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு விகிதம் 7,16,406 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. முந்தைய நாளில் பதிவான 6.95 சதவீதத்திலிருந்து, நேற்றைய நேர்மறை விகிதம் 4.66 சதவீதமாக உள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் இதுவரை 4,12,85,732 டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் 2,31,57,241 முதல் டோஸ், மற்றும் 1,79,73,654 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 1,54,837 பூஸ்டர் டோஸ்களும் அடங்கும்.
LPG சிலிண்டர் விலை முதல் SBI கட்டணம் வரை – பிப்.1 முதல் அமலுக்கு வந்துள்ள மாற்றங்கள்!
அரசின் அறிக்கையின்படி, 15-18 வயதுக்குட்பட்ட கிட்டத்தட்ட ஒன்பது லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, ஆனால் பள்ளிகள் திறந்தால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது எளிதாக இருக்கும் என்று முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார். மாநில அரசு குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு சரியான முறையினை கையாண்டு வருகிறது. மேலும் பிப்ரவரி 28க்குள் தகுதியான அனைவர்க்கும் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் வழங்குவதை அரசு இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அசாமில் பள்ளிகள் முன்னதாக மூடப்பட்டன. 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் ஜனவரி 25 ம் தேதி அன்று மூடப்பட்டன, மேலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான நேரடி வகுப்புகள் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சுழற்சி நாட்களில் அனுமதிக்கப்படுகின்றன. இப்போது, தினசரி நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், மாணவர்களுக்கான தடுப்பூசி திட்டம் வேகத்தில் இருப்பதால், அனைத்து COVID-19 விதிகளையும் பின்பற்றி பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்தபடி, மாநிலத்தில் பிப்ரவரி 15 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க அசாம் அரசு திட்டமிட்டுள்ளது. கோவிட்-19 கட்டுப்பாடுகளில் சில நாட்களுக்குள் தளர்வுகளை மாநில அரசு அறிவிக்க வாய்ப்புள்ளது. தினசரி COVID-19 வழக்குகளின் எண்ணிக்கை 1,000 ஆகக் குறைந்தவுடன் கட்டுப்பாடுகளை தளர்த்த அசாம் அரசு திட்டமிட்டுள்ளதாக அசாம் முதல்வர் தெரிவித்துள்ளார்.