பிப்.4 முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு – அரசு அறிவிப்பு! மாணவர்கள் உற்சாகம்!
கொரோனா தினசரி தொற்று குறைத்து வருவதன் காரணமாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 4 முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட உள்ளதாக உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பள்ளி கல்லூரிகள் திறப்பு:
கொரோனா மூன்றாம் அலையின் துவக்கமாக ஜனவரி 2 வது வாரத்தில் இருந்து தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகம், மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டன. மேலும் ஜனவரி 31 வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இருப்பினும் தொற்றின் வேகம் அதிகரித்தாலும், உயிரிழப்புகள் குறைவாக உள்ளதால் ஒரு சில மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் இன்று முதல் திறக்கப்பட உள்ளன.
மாநிலம் முழுவதும் பிப்ரவரி 15 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – முதல்வர் அறிவிப்பு!
இந்த வகையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் திங்கள் கிழமை அன்று யூனியன் பிரதேசத்தின் உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம், தலைமையில் கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனால் மாணவர்களின் நேரடி கற்றல் முறை பாதிக்கப்பட்டு இருப்பதாக மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
LPG சிலிண்டர் விலை முதல் SBI கட்டணம் வரை – பிப்.1 முதல் அமலுக்கு வந்துள்ள மாற்றங்கள்!
இந்த கோரிக்கை அடிப்படையில் பிப்ரவரி 4 முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க உள்ளதாக உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் பள்ளி கல்லூரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அடிப்படையில் நடைபெற வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு இருந்தாலும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிப்ரவரி 28 வரை அமலில் இருக்கும் என புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார் .