LPG சிலிண்டர் விலை முதல் SBI கட்டணம் வரை – பிப்.1 முதல் அமலுக்கு வந்துள்ள மாற்றங்கள்!
நாட்டில் வருடத்தின் இரண்டாவது மாதமான பிப்ரவரி தொடங்கியுள்ளது. இதனையடுத்து இந்த மாதம் முதல் வங்கித்துறை முதல் சிலிண்டர் வரை என்னவெல்லாம் மாறியுள்ளது என்று இப்போது தெரிந்து கொள்வோம்.
புதிய மாற்றம்:
நாட்டில் ஒவ்வொரு ஆண்டு தொடங்கும் போது அனைத்து துறைகளிலும் சில மாற்றங்கள் நடைபெறும். அந்த வகையில் 2022 ம் ஆண்டு தொடங்கியது முதல் வங்கி பண வர்தனைகளில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் 3 முறைக்கு மேல் ஏடிஎம்களில் பணம் எடுக்க கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் பொது மற்றும் தனியார் வங்கிகளில் கடன் திட்டங்களுக்கான வட்டி விகிதம் மாற்றப்பட்டுள்ளது. புதிய கடன் பெறுவதற்கான வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் ஷாப்பிங்கில் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு சிறந்த விவரங்களை நிறுவனங்கள் சேமிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து சிலிண்டர் விலையும் மாற்றம் அடைந்தது. சிலிண்டர் விலையானது மாதத்தில் இரண்டு முறை மாற்றம் அடைகிறது. அந்த வகையில் தற்போது பிப்ரவரி மாதத்துக்கும் சிலிண்டர் விலை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிலருக்கு சிலிண்டர் மானிய தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. அவர்களுக்கு இந்த மாதம் முதல் மானியத்தொகை வரவு வைக்கப்படும். மேலும் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கான சேவைக் கட்டணத்தை இந்த மாதம் முதல் ரத்து செய்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
YONO ஆப் மூலம் ஐஎம்பிஎஸ் முறையில் 5 லட்சம் ரூபாய் வரை சேவைக் கட்டணம் இனி இல்லை என்று தெரிவித்துள்ளது. 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் மத்திய நிதி அமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளதை அடுத்து ஏராளமான விதிமுறைகள் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்து பலரின் கோரிக்கையாக உள்ள நிலையில் இது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.