IPL மெகா ஏலம்: பெங்களூரு அணியின் வசம் ரூ.57 கோடி! குறிவைக்கும் வீரர்கள் யார்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
ஐபிஎல் 2022 ஏலம் வருகிற பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கு IPL யில் பங்கேற்கும் 10 அணிகளும் சிறந்த வீரர்களை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முக்கியமான வீரர்களை ஏலத்தில் குறிவைத்துள்ளன.
IPL மெகா ஏலம்:
ஐபிஎல் மெகா ஏலம் இம்மாதம் 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெற உள்ளது . ஐபிஎல்லின் அனைத்து 10 அணிகளும் இந்த ஏலத்தில் பங்கேற்று வலுவான வீரர்களை ஏலத்தில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு IPL யில் மொத்தம் 1214 வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளார்கள். இதில் கோடிக்கணக்கான ரூபாயில் வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த இத்தொடரில் புதிதாக லக்னோ, அகமதாபாத் ஆகிய இரண்டு அணிகளும் தற்போது இணைந்துள்ளன. 8 அணிகளும் விதிமுறைக்கு உட்பட்டு தலா 4 வீரர்கள் வரை மட்டுமே தக்க வைக்க வேண்டும். பிசிசிஐ யின் இந்த அறிவிப்பின் படி 8 அணிகளும் தங்களது வீரர்களை தக்க வைத்துவிட்டன. புதிய இரண்டு அணிகளும் தலா 3 வீரர்களை தக்க வைத்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கடந்த IPL சீசனில் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர்களை வாங்கியது. கிறிஸ் கெய்ல், ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோரின் சிறந்த பேட்டிங் RCB அணி வெற்றிக்கு முக்கிய பங்காக இருந்தது. ஏபி டி ரின் வில்லியர்ஸின் ஓய்வு பெங்களூர் அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து விராட் கோலி ஐபிஎல் 2021 க்குப் பிறகு கேப்டன் பதவியில் இருந்து விலகினார் மற்றும் ஒரு வீரராக தொடர்ந்து விளையாடுவதாக உறுதியளித்தார். இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்தில் சிறந்த கேப்டனை தெரிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதுகுறித்து பிப்ரவரி 12 முன்பு ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது.
தமிழகத்தில் பிப்ரவரி மாதம் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை – விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
BCCI அறிவிப்பின்படி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விராட் கோலி 15 கோடி ரூபாய்க்கும், கிளென் மேக்ஸ்வெல் 11 கோடி ரூபாய்க்கும், முகமது சிராஜ் 7 கோடி ரூபாய்க்கும் மூன்று வீரர்களை தக்கவைத்துக் கொண்டது. இந்த ஆண்டு ஏலத்தில் வீரர்களை எடுக்க 57 கோடி ரூபாய்க்கு மிச்சம் உள்ளது. இதை தொடர்ந்து இந்த ஆண்டு ஏலத்தில் RCB அணி தொடக்க வீரர்களாகிய தவான் ,வார்னர் , தவான் மற்றும் பின்ச் ஆகியோரை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டு வருகிறது. மேலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இடத்தை நிரப்ப மோர்கன் , மலான் ,ரெய்னா ,ஸ்மித் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரை குறிவைத்துள்ளது. இதனை தொடர்ந்து பந்து வீச்சாளர்களாகிய வுட் ,நடராஜன் ,ஜோர்டன் ,கிருஷ்ணா,சுந்தர் ,ஹசார்ங்கா ,ஐயர் என மொத்தம் 7 பௌலர்களை ஏலத்தில் எடுக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.