
ரயில்வே துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு அடித்த ஜாக்பாட்..!! ” இனி, மீண்டும் DUTY-ல் சேரலாம்”|| RRB அதிரடி உத்தரவு”..!!
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்(RRB) ஆனது கடந்த சில நாட்களுக்கு முன் ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த வகையில், தற்போது ரயில்வே துறையில் ஓய்வு பெற்ற 65 வயதிற்கு உட்பட்ட ஊழியர்களை லோகோ பைலட், உதவி லோகோ பைலட்,தண்டவாள பராமரிப்பாளர், பாயிண்ட்ஸ் மேன், பொறியாளர், ஸ்டேசன் மாஸ்டர் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களில் மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்த ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
வீட்டிலிருந்தே மாதம் 30,000 வரை சம்பாதிக்கலாம்..!! எப்படினு தெரியுமா..? வாருங்கள் பார்க்கலாம்..!!
மேலும், “பணி ஓய்வுக்கு முந்தைய 5 ஆண்டுகள் பணியில் நன்னடத்தை சான்று பெற்றவர்களை பணி அமர்த்தலாம்”. இதுமட்டுமின்றி, “குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாத பணியாளர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்” என்று மண்டல ரயில்வே பொது மேலாளர்களுக்கு, ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.






















