தமிழகத்தில் 25 உழவர் சந்தைகளை புதுப்பிக்க ரூ. 8.75 கோடி நிதி – அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் இயங்கி வரும் 25 உழவர் சந்தைகளை புதுப்பிக்க ரூ. 8.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது.
உழவர் சந்தை
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த திட்டங்களில் ஒன்று தான் உழவர் சந்தை திட்டம். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற இந்த திட்டம் தற்போது பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 25 உழவர் சந்தைகளை புதுப்பிக்க ரூ.8.75 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியாகி இருக்கிறது. அதன் படி உழவர் சந்தைகளில் மின்னணு சாதனங்கள் பொருத்துதல், மின்னணு எடை, வடிகால் மறு சீரமைப்பு,
RITES நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க விரையுங்கள்!
கூரைப்பழுது பார்த்தல், நடைபாதை அமைத்தல்மற்றும் சீரமைத்தல், சுவர்களில் வண்ணம் பூசுதல் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்ய இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புரனமைக்கும் பணிகள் செய்யப்பட இருப்பதாக தற்போது வெளியான அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்கள் என மொத்தம் 25 உழவர் சந்தைகள் புராணமைக்கப்படும் என வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குனர் தனது கருத்துருவில் வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு பதிலாக செங்கல்பட்டு உழவர் சந்தை இணைக்க பரிந்துரைக்கப்ட்டுள்ளது.