விளம்பர பலகைகள் இறக்கி வைக்க உத்தரவு..!! தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவிப்பு”..!!
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை “ஃபெஞ்சல்” புயலாக வலுப்பெற்ற நிலையில், பல்வேறு மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இப்பகுதிகளில் இனி மின்சாரம் விநியோகம் நிறுத்தம்… மின்வாரியத்துறை அதிரடி அறிவிப்பு..
அந்த வகையில், புயல் எதிரொலியாக 100 கி.மீட்டருக்கு மேல் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் கிரேன்கள், உயர்வான இடங்களில் வைத்திருக்கும் கனரக உபகரணங்கள் மற்றும் விளம்பர பலகைகளை பாதுகாப்பாக கீழே இறக்கி வைக்குமாறு தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
























