சென்னையில் விமான சேவைகள் ரத்து.. பயணிகள் அவதி.. முழு விவரம் உள்ளே..
ஃபெஞ்சல் புயல் இன்று காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. மேலும் மோசமான வானிலை காரணமாக செயல்பாட்டு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விளம்பர பலகைகள் இறக்கி வைக்க உத்தரவு..!! தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவிப்பு”..!!
அதாவது, சென்னையில் இருந்து புறப்படும் இண்டிகோ விமான சேவைகள் இன்று (30-11-2024) முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் இருந்து மங்களூரு மற்றும் திருச்சிக்கு செல்லும் விமானங்கள் நிறுத்தப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து “சென்னைக்கு வருகை தரும் மற்றும் புறப்படும் அனைத்து விமான சேவைகளும் ரத்து எனவும், வானிலை சீரான பிறகு மீண்டும் விமான போக்குவரத்து தொடங்கப்படும்” என்று சென்னை விமான நிலைய நிர்வாகம் கூறியுள்ளது. மேலும், கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.



























